மனித நாகரிகங்களை உருவாக்குவதில் ஆற்றங்கரைகள் வகித்த பங்கை வரலாற்றில் படித்திருக்கிறோம். குழாயடியிலிருந்து அண்டை மாகாணங்கள்,நாடுகள் வரை பரஸ்பரம் தண்ணீருக்காகப் போடும் சண்டைகளை இன்று நேரில் பார்க்கிறோம். நாமும் பங்கெடுக்கிறோம். ஒரு புறம் வறட்சி,வானம் பார்த்த சீமைகள், தொண்டை நனைக்கக்கூட நீரில்லை. இனியோரு புறம் வெள்ளக் கொடுமை,புயல் பிரளயம் தாண்டவம். இவையெல்லாம் உள்ளத்தைப் பிடித்துப் பிசைந்த போது இயல்பாய் அறுவை சிகிச்சை எதுவும் தேவையின்றி பிறந்ததுதான் 'வெள்ளம்' எனும் இந்நாவல்... இதுபோன்ற ஒரு இக்கட்டான தருணம்தான் முன்பு என்னை 'தீ...தீ...' நாவலையும் எழதத் தூண்டியது. இப்போது தோன்றுகிறது தீ,வெள்ளம் போன்று பஞ்ச பூதங்களில் காற்று,வானம், பூமி இவற்றைப் பற்றியும் நாவல்களில் சோதனை செய்து பார்த்தால் என்ன என்று.இப்போது யோசித்துப் பார்க்கும்போது தோன்றுகிறது.