நதிகளைப் பற்றியும் நதி நீர் பங்கீட்டு விஷயமாகவும். நம் பாரத நாட்டில் தற்போது நிலவி வரும் கருத்து வேறு பாட்டைப் பற்றி நாம் அனைவரும் அறிவோம். ஆதிகள் கொண்டுவரும் நீரைப் பற்றி தான் நாம் அனைவரும் தெரிந்து கொண்டுள்ளோமே தவிர அந்த நதிகள் எங்கிருந்து உற்பத்தியாகி, எவ்வாறேல்லாம் மக்களுக்கு நன்மையைச் செய்து, கடைசியில் எங்கு கடலில் கலக்கிறது என்ற விவரங்கள், நம்மவருள் சிலருக்குத்தான் தெரியும். ஆனால் பலருக்கும் இது தெரியவே தெரியாது. அப்படித் தெரிந்து விட்டால், அநேகமாக பலரும் நதிகள் இணைப்பு விஷயம் குறித்து சிந்திக்கத் தொடங்கி அதுவே நமது தேச ஒற்றுமைக்கு ஒரு ஊன்று கோல் போலவே மாறும் என்பது எங்களது அபிப்பிராயம்.