“எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்வோம்" என்பது முதுமொழி. அதாவது ஒரு மனிதன் நல்லது செய்தால், அவனுக்கு நல்லதே நடக்கும் அதே மனிதன் தீயவற்றை செய்தால் தீமையே நடக்கும் என்பது மேற்கண்ட முதுமொழிக்கான பொருள். நல்ல விடயங்களை உணர்த்துவதற்காக, பல அறிவார்ந்த யோசனைகளைக் கையாண்டு, அவற்றில் நகைச்சுவையைப் புகுத்தி, சிரிக்க வைப்பதோடு சிந்திக்கவும் வைப்பதுதான் பீர்பாலின் கதைகள்.