நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்துருகத்
தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர்
செஞ்சொல் புனைமாலை சிறந்திடவே
பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம்.
ஓதுவார், கேட்பாருடைய இளகிடாத கடினமான கல்லாகிய நெஞ்சமும், கரைந்து உருகுமாறு, "முருகா நீயே எனக்குப் புகலிடம், வேறு புகலிடம் எமக்கேது?" என்று சரணாகதியாகிடும்போது, அருள்புரியும் ஆறுமுகப் பெருமானுக்கு, இயற்றமிழில் செம்மைப்பொருந்திய சொற்களைக்கொண்டுள்ள பாமாலையான இக்கந்தரநுபூதி நூலானது சிறப்படைய வேண்டி, ஐந்து திருக்கரங்களையும் யானை முகத்தினையும் கொண்ட விநாயகப் பெருமானின் இரு திருவடிகளையும் நாம் வணங்கிப் பணிந்திடுவோம்.
பாடல் மற்றும் அதற்குரிய விளக்கத்துடன் கந்தரநுபூதி என்ற இந்நூல் வெளியிடப்பட்டிருக்கிறது..வாங்கிப் படித்து பக்தியும், பரவசமும் அடையுங்கள்..