தே. பிரியா என்ற இயற்பெயர் கொண்ட இந்நூலாசிரியர் வருதை மண்ணைத் தாயகமாய்க் கொண்டவர். இவர் பள்ளிப்படிப்பை முடித்த பின்னர். மூன்றாண்டு காலம் இளங்கலைத் தமிழ் பயின்ற கல்லூரியான விருதுநகர். வே.வ.வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லூரி (தன்னாட்சி)யில் 2003 ஆம் ஆண்டு முதல் உதவிப்பேராசிரியராய் பணிபுரிந்து வருபவர். இவரின் ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வின் தலைப்பு 'அம்பை சிறுகதைகளில் பொண்ணியம்' என்பதாகும். இவர் 'பாரதி- பாரதிதாசன் படைப்புகளில் பெண்ணியம்' என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டவர். இக்கால இலக்கியங்களிலும், நவீனத்துவச் சிந்தனைகளிலும் ஆர்வம் மிகுந்த இவர் 'சமதர்ம சித்தாந்த அக்கினிக் குஞ்சு - பா. ஜீவானந்தம்' என்ற மார்க்சியத் திறனாய்வு நூலினை 2016ஆம் ஆண்டு ஆய்வுலகிற்கு நல்கியவர். தொடர்ந்து ஆய்வுப்பணியாய் தேசிய, பன்னாட்டுக் கருத்தரங்குகள் மற்றும் ஆய்விதழ்களில் முப்பத்தைந்திற்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை வழங்கியுள்ளார்.