பழந்தமிழ் இலக்கியத்தில் வெண்பாவின் கண்டுபிடிப்புப் போன்றதுதான் நவீனத் தமிழ் இலக்கியத்தில் சிறுகதையின் கண்டுபிடிப்பும். சிறுகதை இடம்பெறாத தமிழ் இதழ்களே இல்லையெனலாம். அந்த அளவுக்குச் சிறுகதைகள் வாசகரின் உள்ளத்தை ஈர்த்தனவாக உள்ளன.
இந்த ' நான் அம்மாவாகிட்டேன்' சிறுகதைத் தொகுப்பில் பத்துச் சிறுகதைகள் உள்ளன. பத்தும் பத்துவிதம். பத்து இனிப்பு மிட்டாய்கள். இந்தத் தொகுப்பில் உள்ள எந்தவொரு சிறுகதையை வாசித்தாலும் நம் மனம் தன் போக்கில் திளைக்கத் தொடங்கிவிடும்.
குடும்பத்துக்குள்ளும் குடும்பத்துக்கு வெளியிலும் சமுதாயத்தின் நடுவேயும் மனிதர்கள் எதிர்கொள்ள நேரும் சிக்கல்கள் பற்றி இந்தக் கதைகள் விவரிக்கின்றன.