இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக கோவில்பட்டி மக்களால் இந்து முறை தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர் சோ.அழகர்சாமியின் வாழ்க்கை வரலாறே இந்நூல். அழகர்சாமி சட்டமன்றத்திலும் போராடினார். களத்தில் இறங்கியும் போராடினார். விவசாயிகளைத் திரட்டியும் போராடினார். மக்களுடைய பிரச்சனைகளுக்கு தீவிரமான போராட்டங்களை நடத்திய அழகர்சாமியின் வரலாற்றை நூலசிரியர் எழுதியுள்ளார். இந்த வரலாறு தனிமனித வரலாறு அல்ல, அந்த மண்ணுக்காகப் போராடிய போராட்டங்களின் வரலாறாகவும், மக்களின் வரலாறாகவும், மண்ணின் வரலாறாகவும் அழகர்சாமியின் வாழ்க்கையை வரலாற்றுப் பின்னணியோடு சிறப்பாக எஸ்.காசிவிஸ்வநாதன் பதிவு செய்துள்ளார்.