கல்யாணம் என்பது ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படும் ஒரு பந்தம் என்றாலும் , கணவன் மனைவி உறவில் தொடங்கி, அது இரு குடும்பங்களையும் பிணைத்து வைக்கிறது. அதனால் இரு தரப்பினரைச் சேர்ந்த சுற்றத்தாரும் இந்தச் சூழலில் சிக்கி, சிறு சிறு வேற்றுமைகள் காரணமாகப் பெரும் குழப்பங்களுக்கும், மீளா பிரச்சனைகளுக்கும் ஆளாகி, மன உளைச்சல்கள், சங்கடங்கள், சண்டை சச்சரவுகளையும் சந்தித்து அல்லற்பட நேரிடுகிறது. இவற்றுக்கிடையே அவ்வப்போது மகிழ்ச்சியையும் மன நிம்மதியையும் சந்திக்கவும் பழகிக் கொள்கிறோம்.