இவ்வளவு பாப்புலரான ஸ்கைலாபையே பயன் படுத்தி ஸ்கைலாப் சம்பந்தி என்று நாடகத் தலைப்பை அறிவித்ததும் நாடக உலகில் அது ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னரே, கிருஷ்ணசாமி என்ற பாத்திரத்தைப் படைத்தேன். ஸ்கைலாப் மாதிரி பரபரப்பை ஏற்படுத்தி,கடைசியில் நல்லதனமாக அடங்கி ஒடுங்கிப்போன சம்பந்தியாக அவரை உருவகம் படுத்தினேன்.