இந்தப் புத்தகம், இன்னொரு பாடம் குறித்த மற்றுமொரு புத்தகம் அல்ல.
இந்தப் புத்தகம், நீங்கள் படிக்கும் பாடங்களை இன்னும் ஆழமாகப்
புரிந்துகொள்வதற்கு உங்களைத் திறன்பெற்றவர்களாக ஆக்க முயல்கிறது. தத்துவ
அடிப்படையில் சிந்திப்பது நீங்கள் மேலும் சுதந்திரமானவர்களாக,
விமர்சனபூர்வமானவர்களாக, படைப்பூக்கமிக்கவர்களாக மாறுவதற்கு அவசியமான திறனை
உங்களுக்குக் கொடுக்கும். நீங்கள் படிக்கும்போது, எழுதும்போது,
சிந்திக்கும்போது, மொழியைப் பயன்படுத்தும்போது, கணிதத்தில் ஈடுபடும்போது,
ஒரு படத்தை வரையும்போது, நல்ல மனிதராக இருக்கும்போது அல்லது எதையோ
கற்றுக்கொள்ளும்போது உண்மையில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று இந்தப்
புத்தகம் உங்களைச் சிந்திக்கத் தூண்டும். ஒவ்வொரு வகுப்பறையிலும், ஒவ்வொரு
வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம்!