வாழ்வும் தொழிலும் வளம் பெற ரஜினியின் 30 முத்திரை வசனங்கள் சாதாரணக் கூலித் தொழிலாளியானாலும் சரி... பன்னாட்டு நிறுவனத்தின் மூத்த நிர்வாக அதிகாரியானாலும் சரி... படிப்பறிவு இல்லாதவரானாலும் சரி... முதுநிலைப் பட்டம் பெற்றவரானாலும் சரி... ரஜினிகாந்தின் பன்ச் டயலாக்கைக் கேட்டதும் கண்ணில் சின்ன மின்னலோ புன்சிரிப்போ ஏற்படும். ரஜினியால் ஒரு முறை சொல்லப்-படும் வசனங்கள் பலரால் நூற்றுக்கணக்கான தடவை, தங்கள் கருத்தை சர்வ சாதாரணமாக அதே சமயம் வலிமையுடன் சொல்லப் பயன்படுகின்றன.
நிர்வாகம், உத்வேகம், தலைமைப் பண்பு, அர்ப்பண உணர்வு, தொலைநோக்கு, சமூகக் கடமை, நேர நிர்வாகம், செயல் திறமை, கவுரவம், பகிர்ந்து கொடுக்கும் குணம், சுய நலமின்மை என பல மதிப்பீடுகளை ரஜினியின் பன்ச் டயலாக்குகள் வழியாக நூலின் ஆசிரியர்கள், சுவாரசியமான நடையில் விளக்கியுள்ளார்கள்.நம் காலத்தில் ஒளி வீசும்?சூப்பர் ஸ்டாருக்கு எளிய காணிக்கையே இந்த நூல்.