நம் நாட்டிலே தோன்றிய வீரர்கள், தேச பக்தர்கள், அறிஞர்கள், மகான்கள் எத்தனை எத்தனையோ பேர். அவர்களின் வாழ்க்கை வரலாறுகளை, நல்ல தமிழில், எளிய நடையில் 'நாட்டுக்கு உழைத்த நல்லவர்' என்னும் தலைப்பிலே வெளியிட்டு, தெய்வத்திற்குச் சமமான குழந்தைகளின் முன் பணிவன்புடன் படைக்கின்றோம். இவ்வரிசை நூல்களை வரிசையாய் வாங்கிப் படித்துப் பயன்பெற வேண்டுகிறோம்.