இவர் படைத்த 'கரிசல்', 'ஜீவா என்றொரு மானுடன்' ஆகியவை தமிழக அரசின் பரிசினைப் பெற்றுள்ளன.
'மார்க்ஸிய அழகியல்' என்ற மொழிபெயர்ப்பு நூலிற்காக தஞ்சைத் தமிழ்ப்
பல்கலைக்கழகம் இவருக்குப் பரிசளித்துள்ளது. இவரின் படைப்புகள் சில
முதுநிலைப் பட்டப்படிப்பிற்கு பாடநூல்களாக உள்ள ன. 'புதிய தரிசனங்கள்' என்ற
இந்த நாவலுக்கு மத்திய அரசு 1994ஆம் ஆண்டு சாகித்ய அகாடெமி விருது வழங்கி
சிறப்பித்தது. பதினான்கு ஆண்டுகள் கடும் முயற்சியில் உருவாக்கப்பட்ட இந்த
நாவல் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு மைல்கல் என்பதில் எள்ளளவும்
அய்யமில்லை. 10TDom சிறுகதைகள், நாவல்கள், கட்டுரை நூல்கள், கவிதை நூல்,
மொழிபெயர்ப்பு நூல்கள், பயண நூல் என இவரது படைப்புகள் நீண்டுகொண்டே
போகின்றன.
தமிழ் இலக்கியத்தில் தீவிர மார்க்சியக் கண்ணோட்டப் படைப்பாளரான
பொன்னீலன் அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் தேசிய சம்மேளனத்தின் தலைவராக
உள்ளார்.