"படித்தால் உறங்க வைப்பதல்ல நூல் உறங்க விடாமல் சிந்திக்கவைப்பதே சிறந்த நூல்' என்பார்கள். தமிழகத்தின் ஐந்நூறு ஆண்டுகால வரலாற்றைத் தோண்டி எடுத்து கண்ணெதிரே நிறுத்தியிருக்கும் இந்நூல் நம் சிந்தனையைத் தட்டி எழுப்பும் வல்லமை கொண்டது. செய்திகளையே சுவாசமாய்க் கொண்ட அன்பர்களுக்கு இந்நூல் புத்துணர்ச்சியையும் புதுத்தெளிவையும் அளிக்கும். போட்டித் தேர்வாளர்களுக்கு இந்நூல் புது வெளிச்சத்தைத் தரும். அரசு அலுவலர்கள், அரசியல்வாதிகள், சுற்றுலாப் பயணிகள் வரலாறு மற்றும் புவியியல் ஆய்வாளர்கள். இலக்கியவாதிகள். மாணவர்கள் என அனைவருக்கும் இந்நூல் ஒரு வழிகாட்டியாகப் பயன்படும்.