தொடக்க கால நூல்கள் பல வெளியாயின. அவை உரைநடை காப்பியமாகக் கருதப்பட்டது. இடம், காலம் முதலியவற்றில் விரிவான வருணனைகளும் பாத்திரங்களின் உயர்வு நவிற்சிக்கான உரைநடைக் காப்பியமாகக் கருதப்பட்டது. இடம், காலம் முதலியவற்றின் விரிவான வருணனைகளும் பாத்திரங்களின் உயர்வு நவிற்சியான வருணனைகளும் கதைத் தலைவனும் தலைவியும் தன்னிகரற்றவர்களாகப் படைக்கப் படுதலும் ஆகிய காப்பியத் தன்மைகள் தொடக்கக் காலப் புதினங்களின் இயல்புகளாக அமைந்தன. ‘பிராதப முதலியார் சரிதம்’ என்பது முதல் தமிழ்ப் புதினமாகும். இது வேத நாயகப்பிள்ளை அவர்களால் 1867-ஆம் ஆண்டில் எழுதப் பெற்றது. இவரது இரண்டாவது நாவல் ‘சுகுண சுந்தரி’ என்பது. இவ்விரு நாவல்களும் இன்பமாகவே முடிகின்றன.1893-ல் குருசாமி சர்மா என்பவரால் ‘பிரேமலாவதியம்’ என்ற புதினம் இயற்றப்பட்டது.1896-ல் பரிதிமாற் கலைஞர் அவர்களால் ‘மதிவாணம்’ என்னும் தலைப்பில் நாவல் எழுதப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டு இறுதியில் கிருபை சத்திநாதன் அம்மாள் அவர்களால் ‘கமலம்’ ‘சுகுணா’ என்ற இரு நாவல்களும் இயற்றப்பட்டன. இருபதாம் நூற்றாண்டில் வெளியாகிய நூல்கள்