இந்தியாவின் ஒப்பற்ற கலை, கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கக் கூடியவை அமர் சித்திரக் கதைகள். என் குழந்தைகள் சிறுவயதில் இந்தப் புத்தகங்களை ஆர்வத்துடன் படித்தார்கள். அதே போல இந்தியா முழுவதும் ஏராளமான குழந்தைகள் இந்தப் புத்தகங்களைப் படித்திருப்பார்கள்! குழந்தைகளைச் சென்றடைய சிறந்த சித்திரக்கதைகள்தான். இதன்மூலம் வாசிக்கும் பழக்கம் அதிகரிக்கும். நமது கலாசாரத்தைப் பற்றிய தேடல்கள் உருவாகும்!