எம்மொழியாம் தமிழ் மொழியின்
ஏற்றம் உணர்ந்து தெளிந்தது,
வள்ளுவரின் வாய் மொழியால் தான்!......
வாழ்வியலின் தத்துவங்கள்
அனைத்தும் உண்டு "முப்பாலில்"
சிறுமியாய் மொழி பழகிய நாள்
முதலாய் என் சிந்தனையை சீராக்கிய பெருமை வள்ளுவத்திற்கே!
பாயிரவியலும், இல்லறவியலும்,
துறவியலும்,ஊழியலும்
பாங்காய் "அறத்துப்பாலை"
அறிவுறுத்த....
அரசியலும், அமைச்சியலும்,
அரணியலும், கூழியலும்,
படையியலும், நட்பியலும்
குடியியலும் அக்கரையாய்
"பொருட்பாலைப்"புகட்ட.....
களவியலும், கற்பியலும்,
கண்ணியமாய் "காமத்துப்பாலை"
உணர்த்த....