'உலகை உலுக்கும் உயிர்க்கொல்லி நோய்கள்' என்ற இந்த நூல் ஓர் அற்புதமான
படைப்பு. அவரது முந்தைய நூல்களைப் போலவே இதுவும் சிறப்பாக
அமைந்திருக்கிறது. பாமர மக்களும் பயனுறும் வகையில் இதை எளிய முறையில்
வடித்திருக்கிறார். எல்லாவித தொற்று நோய்களையும், அவற்றைக் கண்டறியும்
முறைகளையும் தொகுத்து பூரணமாக விளக்கியிருக்கிறார். நோய்க்கு முறையான
தீர்வு தர இந்த நூல் மிகவும் அனுகூலமாக இருக்கும் என்பதில் சிறிதும்
ஐயமில்லை. ஒவ்வொரு இல்லத்திலும் இருக்கவேண்டிய நூல் இது. பள்ளிகளையும்
கல்லூரிகளையும் எல்லா நூல் நிலையங்களையும் அலங்கரிக்க வேண்டிய நூல் இது.