அறைக்குள் நுழைந்த பரிமளாவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவளைக் கண்டதும் 'மியாவ்..' என்றபடி ஓடி வந்து தன்னுடைய காலின் அருகில் நடுங்கிக்கொண்டிருந்த பூனைக்குட்டியை கோபத்துடன் பார்த்தாள் பரிமளா.
அந்த வீட்டில் பரிமளாவின் மாமியார் இருந்தவரை தினமும் ஏதாவது பூனைக்குட்டி வீட்டிற்கு வருவதும் அவற்றிற்கு உணவுப் பொருள் எதையாவது கொடுப்பதும் வழக்கம்.
வீட்டிற்கு புது வரவாக அவர்களுக்கு குழந்தை பிறந்ததும் அந்த குழந்தைக்கு வேடிக்கை காட்ட பூனைகளை காட்டுவது பழக்கமாகிப் போனது.
குழந்தை வளர்ந்தது போலவே வீட்டில் பூனைகளின் எண்ணிக்கைகளும் வளர்ந்தது. குட்டிப் பாப்பா பூனை இல்லை என்றால் சாப்பிடுறது இல்லையென்றானது.
இரண்டு மாதம் முன்பு கிராமத்தில் இருந்து வந்திருந்த பரிமளாவின் அம்மாதான் பூனைகளை பற்றிய பூகம்ப கதைகள் பலவற்றை அவிழ்த்து விட்டு சென்றார்