இந்தப் புதினத்திலும் குற்றவியலின் அடிப்படையாக, கொள்கையான ‘குற்ற எண்ணம்இல்லாத செயல் குற்றமாகாது’ என்பதைச் சொல்லித் தருகிறார் சிறந்த புதினஆசிரியராக.
‘சிந்து இளவரசி’, முனைவர் கைலாசத்தின் பத்தாவது வரலாற்றுப் புதினம் என்று நினைக்கிறேன். அவரின் முதல் புதினமான ‘மலர்ச்சோலை மங்கை’யிலிருந்து சென்றவருடம் வெளியாகி மிகுந்த புகழ் பெற்ற அவரின் ‘இராசாளி’வரை அவரது எல்லாப்புதினங்களும் வெற்றி பெற்றிருக்கின்றன.
வரலாற்றுப் புதினத்தின் நட்சத்திர எழுத்தரசனான முனைவர் எல். கைலாசத்தின் ‘சிந்துஇளவரசி’ மிகப் பெரிய வெற்றி பெற அவர் வணங்கும் தெய்வமும், வாசகர்களும் துணை புரியட்டும்.