வ.உ.சி, திரு.வி.க, தெ.பொ.மீ., மகாகனம் சாஸ்திரியார் ஆகிய மாமனிதர்கள் தனிப்பட்ட முறையில் எனக்குச் செய்த உபகாரங்களை, அந்த நிகழ்ச்சிகளை இந் நூலில் கூறும் வாய்ப்பு எனக்குக் கிடைத் துள்ளது. இம்மாமனிதர்களின் பல்வேறு செயல்களைப் பல்வேறு கோணங்களில் பலரும் கண்டிருக்கலாம், அவற்றைத் தொகுத் துரைப்பது என் நோக்கமன்று. இப்பெருமக்களிடம் எனக்கு நேர்ந்த நேரடியான அனுபவங்களிற் சிலவற்றைத் தொகுத்துக்கொடுப்பதே இந்நூலின் நோக்கமாகும்.
- பேரா. அ.ச. ஞானசம்பந்தன்