ஆப்கானிஸ்தானிலிருந்து அக்பர் அரண்மனை நோக்கி ஒரு குடும்பம் பயணித்தபோது மலைப்பாதையில் பிறந்து கைவிடப்பட்ட பெண் சிசு நூர்ஜஹான். வாழ்வின் ஏற்ற இறக்கங்களில் சிக்குண்ட இந்தப் பேரழகிதான் பேரரசர் ஜஹாங்கீரின் காதல் மனைவியாகி மொகலாயப் பேரரசர்களின் வரலாற்றில் இடம்பெற்றசாகசப் பெண். ஆட்சி ஒருவரிடம் என்ற அரசியல், இந்தியாவில் நூர்ஜஹானிடமிருந்துதான் முளைவிட்டது. நூர்ஜஹானின் காதல் வாழ்க்கையைப் பேசுகிறது இந்த நாவல்.