பேராசிரியர் சே. ராமானுஜம் தென்னிந்திய நவீன நாடகத்தின் தொடக்கப்புள்ளி ஆவார். நாடக அரங்கம் இந்த மகானின் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஆகும். தி ராவிட மணமுள்ள தமிழ் மண்ணில் முளைத்த இந்தப் படர்ந்த மரம். செழித்தோங்கி நிழலிட்டது கேலளக் கரையில் அரை நூற்றாண்டு காலம் குருநாதராக நாடகத்திற்கென்று தன்னை அர்பணித்தவர். அவரது கடந்த கால நாடக அனுபவம் எவ்வாறான வடிவத்தில் இருந்தது. அவருடைய அரங்கியற் செயற்பாடு கடந்த காலத்தை உள்வாங்கி எதிர்காலத்தில் ஏற்படும் புதிய பரிமாணங்களுக்கு எவ்வாறு துணை செய்து வருகின்றது என்பதைப் பற்றிய தேடலை அறியும் நோக்குடன் இந்நூல் அமைகின்றது.