பீகார் மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் பிறந்து வளர்ந்து பாட்னாவில் பள்ளிப்படிப்பை முடித்த கன்னையா குமார் பின்னர் டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவராகச் சேர்ந்து மாணவர் தலைவராகச் உயர்ந்தவர். அவர் பிறந்து வளர்ந்தது முதல் பல்கலைக்கழகத்தில் நடந்த பல்வேறு போராட்டங்களின் காரணமாக திகார் சிறைக்குச் செல்ல நேர்ந்தது வரை சுயவரலாறாக இந்நூலில் சுவைபடக் கூறப்பட்டுள்ளன. வலிமையானதும் ஆளுமை மிக்கதுமான அவரது போராட்ட அனுபவங்களின் பிழிவாக அமைந்துள்ளது இந்நூல்.