நவீனகாலத் தமிழகம் தோற்றுவித்த மூலச்சிறப்புள்ள சிந்தனையாளரும் சமூகப் புரட்சியாளருமான தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமியின் பொது வாழ்க்கையின் ஏறத்தாழ 30 ஆண்டு கால வரலாற்றைச் சொல்கிறது இந்த விரிவான ஆராய்ச்சி நூல் இந்தியு தமிழகச் சமுதாயத்தில் பன்னூறாண்டுக் காலமாக, ஆளும் வர்க்கங்களின் கருத்துநிலையை உருவாக்கி, சோழப்பேரரசுக்காலத்திலிருந்து பிரிட்டிஷார் ஆட்சிகாலம் வரையிலும், அதன் பிறகு தேசியப் போராட்டக் காலத்திலும் சமுதாயத்தில் மேலாண்மையை வகிப்பதற்காகப் பார்ப்பனர்களும் பார்ப்பனியமும் மேற்கொண்ட பல்வேறு வடிவங்களைச் சட்டிக் காட்டுகிறது.