ராகுல்ஜி சிறுவயதிலேயே வீட்டைவிட்டு வெளியே ஊர் சுற்றக் கிளம்பியதிலிருந்து அவரது வாழ்நாள் முழுவதுமான அவரது பயணங்களும் அனுபவம், படிப்பு, ஆய்வு, எழுத்து, தேடல் என அனைத்து வாழ்நிலைகளும் இந்நூலில் தன்வரலாறாக எழுதப்பட்டுள்ளது.
இந்தியாவில் காசி, திருப்பதி, உஜ்ஜயினி, காஞ்சிபுரம், பெங்களூர், விஜயநகரம், அகமதாபாத், ஆக்ரா, லாகூர், குடகு போன்ற பல இடங்களுக்கும் பயணம் மேற்கொண்டதோடு நேபாளம், இலங்கை, திபெத், பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, சோவியத், ரஷ்யா, ஜப்பான், கொரியா, ஈரான், சீனா உள்ளிட்ட பல வெளிநாடுகளுக்கு சென்று அவர் கண்டடைந்த அனுபவங்கள் வாசிப்பவர்களை மெய்சிலிர்க்க வைப்பவை.
’சதா திரிந்துகொண்டேயிருக்க வேண்டும்’ என்ற சிந்தை கொண்டிருந்த ராகுல்ஜி தன் அனுபவங்களை ‘மேரி ஜீவன்யாத்ரா’ என்று இந்தியில் எழுதியவை தமிழில் தற்போது இரண்டு பாகங்களாக வெளிவந்துள்ளன.