நெல் வயலில் நெற்கதிர்களுக்கிடையே அங்கொன்றும், இங்கொன்றுமாய் ஒரு சில இடங்களில் மட்டும் களை முளைத்திருப்பதைக் காணலாம். ஆனால் ஜோதிட வயலில் எங்கும் களையே முளைத்து நிற்பதைக் காண்கிறேன். அங்கொன்றும், இங்கொன்றுமாய் ஒரு சில இடங்களில் மட்டும் நெற்கதிர்களைக் காண முடிகிறது. அவ்வாறு நான் கண்ட ஒரு சில கதிர்களில் ஒருவர்தான் தேவராஜ் என்னும் நல்மணி, எளிமையான தோற்றமும் யதார்த்தமான பேச்சும் உடைய இந்த இளைஞர் என்னுடைய ஆத்ம நண்பர் K.B ஜோதிட முறையை எனக்கு அறிமுகம் செய்து வைத்த ஜோதிட ஆசான். புரியாத வார்த்தைகளில் புதிராய் எதையோ எழுதி புழுகிக் கொண்டிருக்கும் ஜோதிட எழுத்தாளர்களைப் பின்பற்றாமல் எளிமையான, யதார்த்தமான , யாவரும் புரிந்து கொள்ளும் நடையில் இவரது எழுத்துக்கள் அமைந்துள்ளன. எனவே ஒரளவுக்கு ஜோதிடத்தில் அடிப்படை ஞானம் உடையவர்கள் இவரது நூலை படித்து K.B ஜோதிட முறையை எளிமையாகக் கற்றுக் கொள்ளலாம். தான் மட்டும் மகா பண்டிதன் எனக்காட்டிக் கொண்டு, தன் மாணவர்கள் எவர்களையும் வளர விடாமல் முட்டுக்கட்டையாய் இருக்கும் பிரபல ஜோதிடர்களைப்போல் இல்லாமல், தன் மாணவனை தன்நிலைக்கு உயர்த்தியிருக்கும் மதுரை k. பாஸ்கரன் மரியாதைக் குரியவராகிறார்.
- சித்த யோகி சிவதாசன் ரவி.