தமிழ் இலக்கணங்களையும் பிறமொழி இலக்கணங்களையும் ஒப்பாய்வு செய்யத் தமிழறிஞர்கள் முன்வர வேண்டும் ஒரு மரபழலக்கணத்தின் புதிய பரிமாணங்களை இத்தகைய ஒப்பாய்வுகள் மூலமாக மட்டுமே காண முடியும் .தமிழ் இலக்கண மரபை மரபிலக்கணங்களின் பின்னனியில் மதிப்பீடு செய்ய இவ்வணுகுமுறை தேவைப்படுகிறது. இவ்வழித்தடத்தில் மற்றொரு நூலைத் தந்துள்ள திருமதி.சங்ரேஸ்வரி நம் பாராட்டிற்குரியவர் .இதுபோன்ற மேலும் பல நூல்கள் தோன்ற இந்நூல் மாதிரியாக அமையுமானால் அதுவே இந்நூலின் வெற்றி. வாழ்த்துகள்