இன்று கணிப்பொறி நம் வாழ்வில் அத்தியாவசியமான தேவயாகி விட்டது. தொலைக்காட்சி நம் அன்றாட வாழ்க்கையால்
கலந்துவிட்டதைத் போல் கணிப்பொறியும் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாகி விட்டது. ஆரம்பக்காலத்தில் மனிதன் எழுத்துக்களைக் கல்லிலும் , மரப்பலகையிலும் துணிகள் மீதும், ஒலைச்சுவடிகளிலுத் எழுதியுள்ளான். பிறகு காலப்போக்கில் விஞ்ஞான முன்னேற்றங்களினால் எழுத்துத்துறையில் தமிழ் மாற்றங்கள் ஏற்ப்பட்டன. அச்சுப்பணியில் தமிழ் பயன்படுத்தப்பட்டு வந்த பொழுது அச்சுப் பணியாளர்கள் மிகுந்த சிரம்ப்பட வேண்டியிருந்தது. அச்சு முறை கண்டுபிடிக்கப்பட்ட அரம்பக்காலத்தில் தமிழில் உள்ள அனைத்து எழுத்துக்களையும் சொற்களுக்கேற்ப ஒவ்வொன்றாக்க் கோர்த்துப் பிறகு, அச்சு எடுக்க வேண்டும். இன்று கணிப்பொறி வாயிலாக டைப் செய்து உட்கார்ந்த இடத்திலிருந்தே பிரிண்ட் எடுத்துக் கொள்கிறோம். கணிப்பொறி உலகை ஆள ஆரம்பித்த நேரத்தில் அதன் செயல்பாடுகள் அனைத்தும் ஆங்கிலத்தை ஒட்டியே இருந்தன. அவ்வளவு சுலபமாகத் தமிழைக் கணிப்பொறியில் பொருத்த முடியவில்லை. அதற்குத் போராட வேண்டடியிருந்தது. பல கணினி வல்லுனர்கள் இம்முயற்சியில் இரவு பகலாக ஈடுபட்டார்கள். தமிழைக் கணிப்பொறியில் கொண்டு வந்தவுடன் தமிழ் ஆர்வலர்கள் தங்கள் பணியை அதோடு நிறுத்திக்கொள்ளவில்லை. இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் அச்சகம் மற்றும் பதிப்பகங்களின் தமிழ்க் கணினி பயன்பாடு முதலுடத்திலும் அலுவலகம் மற்றும் தரவுப் பணிகளில் கணித்தமிழ் பயன்பாடு இரண்டாம் இடத்திலும், இணையம் மற்றும் தகவல் பரிமாற்றத்தில் கணித்தமிழ் பயன்பாடு மூன்றாம் இடத்திலும் உள்ளது. கணினியில் இன்னும் பல படிகள் முன்னேறி தமிழை வளர்க்க பாடுபடுவோம். -