முனைவர் ச. வின்சென்ட்டின் பல்லாண்டு கால ஆசிரியப் பசியும் , இன்றைய இளைய தலைமுறையினருடன் அவர் கொண்டிருக்கும் நெடுங்கால நல்லுறவும் கல்வித் துறை சார்ந்த கருத்துக்களைத் தெளிவாகவும் துல்லியமாகவும் கூறுவதற்கு அவருக்கு பெரிதும் கைகொடுத்துள்ளன. இன்றைய கல்வியின் தரம், கல்வித் திட்டம், கல்விக்கூடம், வகுப்பறை, கல்விக் கொள்கை, தேர்வுமுறை, பாடத்திட்டம் , நல்லாசிரியர் பண்பு நலன்கள் முதலான கல்வியியல் தொடர்பான சிந்தனைகளைத் தம் கட்டுரைகளிலே திட்பமாகவும் நுட்பமாகவும் வெளியிட்டிருக்கும் பாங்கிற்காக நூலாசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.