எழுபத்தைந்து வயது நிரம்பும் தருணத்தில் தன் வாழ்க்கையைப் பின்னோக்கிப் பார்த்து சரத்பவார் இந்த வாழ்க்கை வரலாற்றை விருப்பு வெறுப்பின்றி முன் வைத்திருக்கிறார்.
“பொது வாழ்வில் இருப்பவர்களுக்குக் குறிப்பிட்ட வேலை, நேரம் என்று எதுவும் கிடையாது” என்ற அவருடைய கருத்துக்கு அவரே உதாரணமான வரலாறு இந்நூல்.
வேளாண்மை, பாதுகாப்புத் துறைகளில் அமைச்சராகப் பவார் சந்தித்தவற்றையும், அதற்கு அவர் எடுத்துக் கொண்ட கடின உழைப்பையும் இந்த வாழ்க்கை வரலாற்று நூல் நல்ல தலைவர், சிறந்த நிர்வாகி, மக்கள் பாலும் தேசத்தின் பாலும் அக்கறை கொண்ட மாமனிதர் என்ற பரிமாணங்களில் உணர்த்துகின்றது