கந்தரலங்காரப் பாடல்களை எளியவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் சீர் பிரித்து எளிய தமிழில் மிக நேர்த்தியாக உரை எழுதித் தந்திருக்கிறார் உரையாசிரியர் கவிஞர் பத்மதேவன் அவர்கள். உரை, மேலும் மேலும் பாடல்களைப் படிக்கத் தூண்டுகிறது. படியுங்கள்; பாடல்களைப் படித்து அனுபவியுங்கள். பொருள் உணர்ந்து சுவையுங்கள்; மகிழுங்கள்; அந்த வள்ளி மணாளன் பாதம் பற்றிப் பிறப்பிறப்பற்ற பேற்றினைப் பெறுங்கள்.