சாதகாலங்காரம் என்பது சோதிடம் சார்ந்த முக்கியமான மூலநூல்களில் ஒன்று. இது கீரனூர் நடராசன் என்பவரால் 17-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. சாலிவாகன சகாப்தம் 1587-இல் (கிபி 1665) நூல் அரங்கேறியதாக நூலின் பாயிரம் குறிப்பிடுகிறது. ஆயிரத்து நூறுக்கும் மேற்பட்ட செய்யுள்களால் ஆனது இந்நூல்.