தாழைக்கோழியின் ஆங்கிலப் பெயரான மூர்-கென் என்ற பெயர் 13ஆம் நூற்றாண்டிலிருந்து ஆங்கில மொழியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மூர் என்ற சொல் சதுப்பு நிலம் என்று பொருள்படும். ஆனால் இந்த சிற்றினம் பொதுவாக கரம்பைநிலங்களில் காணப்படுவதில்லை. ஒரு பழைய பொதுவான பெயரான நீர்க்கோழி என்பது இந்தப் பறவையின் வாழ்விடத்தை மிகவும் விவரிக்கிறது.