விஞ்ஞானிகளின் வாழ்க்கையும் கண்டுபிடிப்புக்களையும் இந்நூலில் சுருக்கமாக எளிய முறையில் எழுதியுள்ளேன். அவர்கள் இளமைக்காலத்தில் இருந்தே எதையும் ஆழ்ந்து நோக்கி, விடாமுயற்சியுடன் பல கண்டுபிடிப்புகளைச் செய்திருக்கிறார்கள். உழைப்பும், உயர்வு, நம்பிக்கையும், உறுதியும் ,புதியன காண வேண்டும் என்ற ஆர்வமும் அவர்களை உலகம் போற்றும் விஞ்ஞானிகளாக உருவாக்கியுள்ளது.