மாயத் திரை’ என்னும் சிறுகதைத் தொகுப்பு மூலம் கதை உலகில் பிரவேசித்தவர் கா.சி.தமிழ்க் குமரன். தொடர்ந்து கதை உலகிலேயே இயங்கி வரும் அவரின் இரண்டாம் தொகுப்பு ‘ஊமைத் துயரம்’.
முதல் கதை ‘பொலி’ விவசாயிகள் பற்றியது. விவசாயிகள் மழையை நம்பி வாழ்பவர்கள். மழை பெய்ய வேண்டிய காலத்தில் பெய்யாது. மழையை நம்பி விதைத்தவன் மழை வராததால் பாதிக்கப்படுகிறான். மழை கை விட்டாலும் அரசு காப்பாற்றும் என்று நம்புகிறான். அரசும் ஏமாற்றி விடுகிறது. அடுத்த வருடம் மழை வரும் என்று வாழ்வைக் கடத்துகிறான். இக் கதையில் ஆசிரியர் விவசாயிகளின் நிலையை எடுத்துக் காட்டியுள்ளார்.