ஒரு கால கட்டத்தில் சார்லஸ் டார்வினும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும் என் நெருங்கிய நன்பர்கள் போல் தெரிய ஆரம்பித்தார்கள் ஐசக் நியூட்டனைப்போல் நம்மால் ஏன் சிந்திக்க முடிவதில்லை எனவும் சீரினிவாச ராமானுஜத்தை பற்றி ஏன் இவ்வளவு நாள் தெரிந்து கொள்ளவில்லை எனவும் தோன்ற ஆரம்பித்தது. ஏனெனில் எந்த துறைகளில் கேள்விகள் கேட்கப்பட்டாலும் தெளிவான விளக்கத்தை பேராசிரியர் அவர்களால் கொடுக்க முடிந்ததே இதற்கு காரணம். ஒரு நிகழ்ச்சியில் அவர் இப்படி சொன்னார் எல்லோரும் என்னிடம் கேட்கிறார்கள் உங்களால் எப்படி எல்லா விசயத்தை பற்றியும் விளக்கம் அளிக்க முடிகிறது என்று அவர்களுக்கு நான் கூறும் பதில் ”என்னைப்போல் ஆவது ஒன்றும் பொரிய காரியமில்லை சிறுவயது முதல் அறிவியல் சார்ந்த விசயங்களை தெரிந்து கொள்ளும் பேரார்வம் இருந்தது அதனால் நிறைய படித்து தொரிந்து கொண்டேன் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய அனுபவம், அறிவியல் கட்டுரைகள் அதிகம் எழுதியது இவைகள் தான் இதற்கு காரணம். கலைக்கதிர் அறிவியல் மாத இதழுக்கு பத்தாண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராக இருந்த போது தமிழில் அறிவியல் கட்டுரைகள் அதிகம் எழுதியதும் ஒரு காரணம் என்று பதிலலித்தார்” ஞானவானி பண்பலை ஒலிபரப்பு 2012 வாக்கில் நிறுத்தப்பட்டது என்னை போன்றவர்களுக்கு பேரதிர்சியாக இருந்தது. மணிசாருடைய பேச்சை இனிமேல் கேட்க முடியாதே என்று.