இறைநிலையை
நோக்கிய ஆன்மீக பயணம் தடைபடாமல் இருக்க இயற்கை அன்னை நமக்கு அளித்துள்ள
இயற்கை உணவுகளை அளவோடு உண்டு, உடலுக்கு நலம் கொடுக்கக்கூடிய யோகாசனம்,
மனதிற்கு வளம் கொடுக்கக்கூடிய தியான பயிற்சிகள், உயிருக்கு உறுதி
கொடுக்கும் காயகல்ப பயிற்சிகள் இவற்றை கடைபிடித்து தீய எண்ணங்களுக்கு இடம்
கொடுக்காமல் மனப்போராட்டம் இன்றி வாழ்வதன் மூலம் நோய் நம்மை எட்டிப்
பார்க்காமல் செய்யலாம். இந்நூலில் பல நூல்களிலிருந்து கிடைத்த தகவல்கள்
தொகுக்கப்பட்டுள்ளன. இதனை படிப்பதோடு நின்று விடாமல் வாழ்க்கையில்
பழக்கப்படுத்தி இறையருளோடு நோயில்லா வாழ்வு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.