சந்தரர் சிவபெருமான் எழுந்தருளி இருக்கும் தலங்கள் பலவற்றுக்கும் சென்று,
இனிய இசைப் பாடல்களால் பாடி, வழிபட்டார். இவை பின்னாளில் தேவாரம் என
வழங்கப் பட்டது. தேவாரம் முழுவதும் பதிக வகை யாப்பால் | அமைந்துள்ளது.
பதிகம் என்பது ஒரு பொருள் பற்றி பாடப்படும் பத்து பாடல்கள். சில
பதிகங்களில் 11 அல்லது 12 பாடல்கள்கூட காணப்படுகின்றன. இவ்வாறு இவர்
பாடியவற்றுள் நமக்குக் கிடைத்துள்ள பதிகங்கள் 100; பாடல்கள் 1026; இவை 84
தலங்களில் பாடப் பட்டவை. )சிவபெருமான் விரும்பிக் கேட்டுப் பெற்றுக் கொண்ட
பாடல்கள் இவை என்பதால், 'சுந்தரர் தேவாரம்' என்னும் இது, ஏழாம் திருமுறையாக
விளங்கும் பேறு பெற்றது. இந்நூலில் பதிகங்களை, அவரது வரலாற்று முறையில்
தொகுத்துத் தந்துள்ளோம்._ மேலும் பதிக வரலாறு, தலவரலாறு, பண், பதம்
பிரிக்கப் பட்ட பாடல், அருஞ்சொற்பொருள் எளிய இனிய தெளிந்த நடையிலான
பொழிப்புரை என ஒவ்வொரு பதிகமும் மிளிர்வதை நூலினுள் சென்று படித்துச்
சுவைக்கும்போது, உங்களால் உணர முடியும்.'அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது'
என்னும் பழமொழிக்கு ஏற்ப இந்நூலும் சிவனது அருள் இன்றி வெளிவரவில்லை என்பதை
மெய்யடியார்கள் உணர்வார்கள்.