தனக்கென ஒரு பாதை, தனக்கென ஒரு கொள்கையை உருவாக்கிக்கொண்டு
எழுதும் ஆற்றலாளர் அய்யா சோலை. அய்யா சின்னகுத்தூசியைப் போன்று நிறை குறை
இரண்டையும் தயங்காமல் எழுதும் தைரியசாலி அய்யா சோலை. அவர் எழுதிய
எழுத்துக்கள் இளைஞர் சமுதாயத்திற்குக் கிடைத்த கருத்துப் பெட்டகங்கள்.
வருங்கால தலைமுறைக்கு அவருடைய எழுத்து ஒரு லட்சியப் பாடம்.
ஒடுக்கப்பட்டவர்கள் அரசியல் சக்தியாக உருவெடுக்க வேண்டும் என்ற ஆசை
அவருக்கு உண்டு. எளிமையாய் இருப்பது மிகவும் கடினம். ஆனால், சோலை
எளிமையாய், எழுத்தில் வலிமையாய் இருந்தார். அறிவுச் சோலையாய், அன்புச்
சோலையாய், தமிழ்ச் சோலையாய் வாழ்ந்தவர் அய்யா சோலை.