எங்களின் அடுத்த படைப்பான 'பிள்ளைக் கனியமுதே!' மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி! எங்களுடைய எழுத்திற்கு உற்சாகமும், வரவேற்பும், ஆக்கப் பூர்வமான கருத்தையும் அளிக்கும் அத்தனை அன்பான வாசகர்களுக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள். "குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள் மழலைச்சொல் கேளா தவர்". திருமணம் முடிந்ததும் மிகுந்த ஆவலோடு எதிர்நோக்கும் பிள்ளைப் பேறு என்பது வயது வித்தியாசமில்லாமல் எல்லோராலும் மகிழ்ச்சியுடன் வரவேற்கப்படும் ஒன்று. ஆனால், அந்த வரம் எக்காரணத்தாலோ தள்ளிப் போகும் பொழுது, சம்பந்தப்பட்டவர்களின் நிலை கவலைக்குரியதாகிறது.