இறைவனையே குருவாகக் கொண்டு, அவர் மூலம் பஞ்ச சம்ஸ்காரம் பெற்ற ஒரே வைணவர்.
அதிக திவ்யக்ஷேத்திரத்து பெருமான்களைப் பாடிய பெருமை பெற்றவர். நாலு கவி பெருமாள் என திருஞான சம்பந்தரால் புகழப்பட்டவர்.
வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். அஷ்டாக்ஷர நாமத்தை இறைவனின் திருவாக்காலேயே அறிந்து கொண்ட பாக்கியசாலி. தமது ஈரத் தமிழ் பாசுரங்களால் இறைவனை வசப்படுத்திய திருமங்கையாழ்வாரது பரவசமூட்டும் திரு அவதாரச் சரித்திரம் அழகு தமிழில்.