பங்குச் சந்தை ஒரு விந்தை உலகு. அதன் மந்திர வித்தை களுக்கு அடிப்படையாய் இருப்பது அதில் நிறைய செல்வம் திரட்ட முடியும் என்பதே. அது முடிவில்லாமல் பலரையும் கவர்ந்திழுப்பது. ஆனால், அதை முழுவதுமாய்ப் புரிந்து கொள்ள இயலாது. எக்காலமும் அதன் செயல்முறைகளும், விலை முறைகளும் அனேக விதங்களில் மாறிக்கொண்டே இருப்பது. புரியாத புதிராக சில நேரம் இருப்பது. ஓரளவு அதனைத் தெரிந்து அதில் ஈடுபட்டால் பொருள் திரட்ட வாய்ப்புகள் நிச்சயம் உள்ளன. அதனைப் பற்றித் தெரிந்து கொள்ள உதவுவது இந்நூல்.