ஆத்ம
சக்தி (Will Power) என்பது நம்மிடம் உள்ளதுதான். அதன் ஆற்றல் அளப்பரியது.
கண்ணுக்குத் தெரியாதது; உறுவமற்றதுதான். அனால், அதன் சக்தியை, மகிமையை
உணர்ந்தவர்கள், அடைந்தவர்கள் மட்டுமே அற்புதங்கள் நிகழ்த்த முடியும்.
நம்மிடமுள்ள அந்த அளப்பரிய சக்தியை நமக்கு நாமே அதைப் பயன்படுத்திக்
கொள்வது எப்படி என்பது பற்றித்தான் ஆசிரியர் சிவராஜயோகி திரு. தம்மண்ண
செட்டியார் அவர்கள் இந்நூலில் சொல்லித் தருகிறார். கற்றுக் கொள்ளுங்கள்;
கற்றுத் தேர்ந்து, அற்புதங்களை நிகழ்த்துங்கள்.