யார் வெற்றியாளர்? இறை நம்பிக்கை, நற்செயல்கள், சத்தியத்தை எடுத்துரைத்தல், பொறுமையை அறிவுறுத்தல் இந்த நான்கு பண்பும் எவரிடம் இருக்கிறதோ, அவற்றின் அடிப்படையில் யார் செயல்படுகிறார்களோ அவர்தான் உண்மையில் வெற்றியாளர் என்றுஇறைமறை குர் ஆன் இல் இருந்து மின்னலாய் கருத்துக்களைப் பொழியும் ஓர் அழகான நூல். சமூகம், அரசியல், ஆன்மிகம், குடும்பம் உள்ளிட்ட நடப்பியல் வாழ்வின் யதார்த்தங்களை எந்த ஒப்பனையும் போலித்தனமும் இன்றி பேசும் நூல். இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல எம்மதத்தினரும் கடைப்பிடிக்கக் கூடிய கருத்துக்கள் நிறைந்திருப்பது நூலின் சிறப்பு. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 27/3/13.