ஷி இஸ் ஸோ யங், ஸோயங், எதுக்காகச் செத்தாளோ கையில ஏதோ நோம்புக் கயிறு மாதிரி தெரிஞ்சுது. மரத்தில இருந்து விழுந்த ஒரு பூ அவ மார்பிலே விழுந்திருந்தது. எத்தனை தலைமயிர் மூக்கிலே சிவப்பா ஒரு கல்லு, கைகால் நகத்தில் க்யூட்டெக்ஸ் எல்லாம் தெரிஞ்சுது. ஓமை காட் எனக்கு படபடங்குது. எதுக்காகச் செத்தாளோ, யார் கொன்னாங்களோ. மிஸ்டர் கணேஷ் சீஸர் பெச்சாரியாவைப் பற்றிப் பேசினீர்கள். அவர் சித்தாந்தங்களைப் பற்றிச் சற்று விவரமாகச் சொல்ல முடியுமா. வஸந்த் இத பார்றா என்று ஆச்சரியத்தில் ஆழ்ந்தான். அவள் குரல் தீர்மானமானதாக இருந்தது. ஒரு முறை வஸந்தைப் பெருமையாகப் பார்த்துத் தலையைத் திருப்பிக்கொண்டாள். குறிக்கோள் இல்லாமல் செய்யப்படும் குற்றம் குற்றமே அல்ல என்கிற விபரீதக் கொள்கையுடன் ஒருவன் கொலை முயற்சியில் ஈடுபடும் இந்தக்கதை சுஹாசினி மணிரத்னம் டைரக்ஷனில் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டது. கணேஷ் வஸந்த் தோன்றும் மிகப்பிரபலமான நாவல்களில் இதுவும் ஒன்று.
- சுஜாதா.