மண்டபம் நிரம்பி வழிந்தது. உட்கார இடம் கிடைக்காமல் நிறையப் பேர் நின்றிருந்தனர்.
பவித்ராவுக்கு ஆச்சரியமாகவும், சந்தோஷமாகவும் இருந்தது. இது போன்ற நல்ல
காரியங்களைப் பொதுமக்கள் என்கரேஜ் பண்ணுவது பெரிய விஷயமல்லவா! முன்பே பெயர்
கொடுத்திருந்ததை விடக் கூடுதலாய் இருபது பெண்களின் பெயர் அவசர அவசரமாக
மண்டபம் வந்தபின்பு சேர்க்கப்பட்டது.
கணவனை இழந்த பெண்கள் ஒரு வட்டத்தைத் தாண்டி வாழ்க்கையை எதிர்நோக்கி வருவது
ஆரோக்கியமான விஷயம் தானே? பவித்ரா பம்பரமாய்ச் சுழன்று கொண்டிருந்தாள்.
"எக்ஸ்க்யூஸ் மீ... மேடம்!"
பத்திரிகையாளர் பகுதியிலிருந்து ஒரு ஆணின் குரல் அழைத்தது.
"யெஸ்..." திரும்பினாள்.
"நீங்க... இந்த அமைப்போட செயலாளர் பவித்ராதானே?"
"யெஸ்!"
"மேடம்... மிஸ்டர் நந்தகுமாரைத் தனியா சந்திக்கணும். ஏற்பாடு பண்ண முடியுமா?"
"ஷ்யூர்... பட் நாட் நவ்! ஒரு வாரம் போகட்டுமே. சார் ரொம்ப பிஸி! இந்த போன்
நம்பருக்கு ஒரு வாரம் கழிச்சி காண்டாக்ட் பண்ணுங்க. நான் நிச்சயமா ஏற்பாடு
பண்றேன்!" என்றபடி தன் விசிட்டிங் கார்டைக் கொடுத்தாள்.