இந்த உலகில் வாழும் ஒவ்வொரு உயிரினத்திற்கும் வாழ்வதற்கு ஏற்ற தகவமைப்பை இயற்கை கொடுத்திருக்கிறது! அதே போல எல்லா உறவுகளையும் விபத்தில் இழந்து அனாதையாக நிற்கும் கதையின் நாயகி சுமனா வாழும் வழியற்று திகைத்து நிற்கிறாள்! அவள் அழகே அவளுக்கு எதிரியாய் ஆபத்தை தோற்றுவிக்க அதிலிருந்து தப்ப எண்ணி வேகமாய் ஓடுகிறாள்.