உலகளாவிய புகழைப் பெற்று பாரதத்திற்குப் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் பெண்களில் சிறப்புடன் விளங்குபவர்களில் ஒருவர் கிரண்பேடி ஆவார். ஆண்களையே மிஞ்சும் வண்ணம் இந்திய காவல் துறையில் சீரிய முறையில் பணியாற்றி, அகில உலகின் கவனத்தைக் கவர்ந்துள்ள இவர், பாரதி கண்ட புதுமைப் பெண்ணாகத் திகழ்ந்து வருகிறார். இந்தப் புதுமைப் பெண்ணின் சாதனையை, வாழ்க்கை வரலாற்றை நண்பர் உயர்திரு எல்.எஸ்.மணி அவர்கள் மிக அற்புதமாக இந்நூலில் படம் பிடித்துக் காட்டியுள்ளார்கள்.
அச்சமில்லை, சுயநலமின்மை, பிறர் நலப் பேணல், மணிதநேயம், தனிமனித ஒழுக்கம் ஆகிய எல்லா நற்பண்புகளும் கிரண்பேடி அவர்களிடம் குடி கொண்டுள்ளன. இம்மங்கையின் வாழ்க்கை தனி மனித ஒழுக்கத்திற்கான தொரு ஒப்பற்ற எடுத்துக்காட்டாகவும், வழிகாட்டியாகவும் விளங்குகிறது.