48 18 மொழிகளுள் ஒன்று (திவாகரம்) என்பதும், அம்மொழி வழங்கிய சுமத்திரா, ஜாவா உள்ளிட்ட தீவுகளின் தொகு தியே சாவக நாடு என்பதும் பல்கலைக் கழக அகராதி வழியே தெளியும் செய்திகள் ஆகும். எனவே இந்நாட் டின் தலைநகரில் வாழ்ந்த ஆபுத்திரனைக் கண்டு மணிமே கலை, அவனை மணிபல்லவம் வரப்பணித்துத் தான் பறந்து சென்று அத் தீவை அடைகிருள். ஆண்டு அவள் பீடிகை யைக் கண்டு, பழம் பிறப்புணர்ச்சியால் பல உண்மைகள் உணர்ந்து தன்வசமிழந்து நிற்கிருள். புண்ணியராசன் என்ற பெயர் கொண்ட ஆபுத்திான் ஆண்டுவர, அவனுக் குப் பழம்பிறப்பை உணர்த்த, தீவதிலகை அங்கே அவன் இறந்ததையும், அவனை விட்டுச் சென்ற மரக்கலச் செட்டி கள் திரும்பிவந்து உயிர்விட்டதையும் கூறி, அந்தப் பழம் பிறப்பு கொண்ட எலும்புகளையும் காட்டுகிருள். இதற் கிடையில் மகன் பிரிவால் மாழ்கிய கிள்ளிவளவன் இந்திர விழாவை மறக்க, புகார் கடலால் கொள்ளப்பெற்றது. தீவ திலகை அதையு